districts

img

பணி ஓய்வு பாராட்டு விழா

தருமபுரி, ஏப்.26- தருமபுரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும்  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை காப்பாளர் ஆசிரியர் சங்கத்தின் சார்பில், பணி நிறைவு பாராட்டு விழா தருமபுரி ஏபிஎஸ் பிளாசாவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சங்கத் தின் மாவட்டத் தலைவர் கே.தேவன் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் எம்.வேலு வரவேற்றார். இணைச் செயலாளர் தினமணி முன்னிலை வகித்தார். பணி ஓய்வுபெற்ற பட்டதாரி காப்பாளர் வி.விநாயகசுந்தரிக்கு சங்கத்தின் சார்பில் நினைவுப்பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில் அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் கோ. பழனியம்மாள், மாவட்டத் தலைவர் எம்.சுருளிநாதன், முன் னாள் செயலாளர் ஏ.சேகர், மாவட்டச் செயலாளர் தெய் வானை, மாவட்ட நிர்வாகிகள் கே.புகழேந்தி, எம்.முரு கன், பி.மகேஸ்வரி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவலர் சையத் முகைதீன் இப்ராகிம், காப்பாளர் சங்க மாநிலப் பொருளாளர் கே.நாராயணசாமி, இணைச்செயலாளர் மணிகண்டன், துணைத்தலைவர் எம்.மகேஷ்குமார், மாவட்டச் செயலாளர் எம்.மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், ஓய்வுபெற்ற விடுதி காப்பாளர் வி.விநாயகசுந்தரி ஏற்புறையாற்றினார்.