தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின், போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை, மருத்துவ சங்க தலைவர் சரவணன் துவக்கி வைத்தார். இதில், சிபிஎம் மாவட்ட செயலாளர் ஏ.குமார், மாற்றுத்திறனாளிகள் சங்க அகில இந்திய பொருளாளர் கே.ஆர்.சக்கரவர்த்தி, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் அருள்குமார், தலைவர் எஸ்.சபரிராஜன், பொருளாளர் எம்.சிலம்பரசன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.