districts

img

போட்டி தேர்வுக்கு நாளிதழ் வாசிப்பு அவசியமாகும்

கோவை, பிப்.19- ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற தேர்வு களுக்கு நாளிதழ்களை மிகுந்த ஆர்வத்துடன் வாசிக்க வேண்டும் என வேளாண்மை பல்கலைக்கழ கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் சைலேந்திரபாபு அறிவுரை வழங்கி னார். கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகளுடன் கலந்து ரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் சைலேந்திரபாபு கலந்து கொண்டார். அப்போது அவர்  பேசுகையில், அறிவியல் மாணவர் கள் அனைவரும் தங்களின் அறிவுத் திறன் மூலம் உலக அளவில் விஞ் ஞானப்பூர்வமான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். அந்த  ஆராய்ச்சி பூமியிலுள்ள அனைத்து  உயிரினத்துக்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும். மாணவர்கள் தங்களின் திறனை வளர்த்துக்கொள் வதன் மூலம் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையலாம். மாணவ, மாணவிகள் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள் ளிட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெறுவ தற்கு நாளிதழ்களை மிகுந்த ஆர் வத்துடன் படிக்க வேண்டும். மொழி களை எழுதவும், படிக்கவும் நன்கு  கற்றுக்கொள்ள வேண்டும். பொது  அறிவு மிகவும் அவசியம். வானிலை  மாற்றம் குறித்து அறிந்து வைத்தி ருக்க வேண்டும். பேராசிரியர்கள் பாடம் நடத்தும்போது மாணவர்க ளின் பயத்தை போக்கும் வகையில்  இருக்க வேண்டும். நானும் இதே  பல்கலைக்கழத்தில் தான் படித் தேன், என்றார். அப்போது அவரின் பேச்சுக்கு  இடையே பல்வேறு துறைகளில் இளம் வயதினர், சிறுவர்கள் சாதித்து வரு வதை வீடியோவாக திரையில் ஒளி பரப்பு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள், சைலேந்திரபாபுவிடம் பல்வேறு  கேள்விகளை கேட்டு கலந்துரையாடி னர். இந்நிகழ்ச்சியில் வேளாண்  பல்கலைக்கழக துணைவேந்தர் வெ. கீதாலட்சுமி, சைலேந்திரபாபுவுக்கு வகுப்பாசிரியரும், வேளாண்மை கல் லூரி முன்னாள் முதன்மையருமான கிருஷ்ணமூர்த்தி, மாணவர் நல மைய  முதன்மையர் மரகதம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.