districts

img

8 மணி நேர வேலை உரிமையை பறிப்பதா? ஆவேச மறியல் - சட்ட நகல் எரிப்பு - கைது

கோவை, ஏப்.24 - தொழிலாளி வர்க்கம் போராடிப்பெற்ற 8  மணி நேர வேலை உரிமையை பறிக்கும் தமிழக அரசின் சட்ட நகலை எரித்து கோவை யில் திங்களன்று வாலிபர் சங்கத்தினர் ஆவேச மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, கைதாகினர். தொழிலாளர் நலச்சட்டத்தில் 65 ஏ சட்ட பிரிவை தமிழ்நாடு அரசு நிறைவேற்றி, 8 மணி  நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்தி,  சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்து  நிறைவேற்றியுள்ளது. இதற்கு மார்க்சிஸ்ட்  கட்சி, சிஐடியு உள்ளிட்ட அனைத்து இயக்கங் களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றன. தொழிலாளி வர்க்கம் போரா டிப்பெற்ற வேலை உரிமையை பறிக்கும் தமி ழக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரி வித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தி னர் மாநிலம் முழுவதும் எழுச்சிகரமான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, 65 ஏ சட்ட பிரிவை ரத்து செய்ய  வலியுறுத்தி கோவையில் இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தினர், கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட தலை வர் விவேகானந்தன் தலைமையில் போராட் டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட செயலா ளர் அர்ஜூன், பொருளாளர் தினேஷ்ராஜா  மற்றும் தீபிகா, ராஜா, நிசார் அஹமத், விக் னேஸ்வரன் உட்பட 100க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர். அப்போது, தமிழக அரசு கொண்டு வந்துள்ள 65 ஏ சட்ட நகலை எரித்த னர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த  முயற்சித்தனர். ஆனால், போலீசாரின் கடும்  எதிர்ப்பையும் மீறி சட்ட நகலை எரித்தனர். இத னால் போலீசாருக்கும், போராட்டக்காரர்க ளுக்கும் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட் டது.

இதைத்தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட  வாலிபர் சங்க நிர்வாகிகளை போலீசார்  குண்டுக்கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றினர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  சிபிஎம் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தை அடுத்துள்ள அன்னை சத்யா நகர் பேருந்து நிறுத்த பகுதி அருகே, மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி கிளை செயலாளர் சண்முகம் தலைமை வகித் தார்.  8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக  மாற்றி, புதிய சட்ட மசோதாவை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.  இதில், கட்சி மாவட்ட குழு உறுப்பினர் கே.மோகன், பெண்கள் கட்சி கிளை செய லாளர் ராணி, முன்னாள் வார்டு கவுன்சி லர் ராஜா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர்.  மாதர் சங்கம் இதேகோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தின் சார்பில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜோதிமணி, செயலாளர் சுதா,  மாநிலக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி மற்றும் நிர்வாகிகள் வனஜா, சாமூண்டீஸ் வரி, அமுதா, தங்கமணி, ஜீவா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று, வேலை நேரத்தை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து அவேச முழக்கங்களை எழுப்பினர்.