தமிழ்நாடு வனத்துறை தீர்த்தமலை வனச்சரகம் மற்றும் பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. தருமபுரி தீர்த்தமலை சூழல் மேம்பாட்டு குழு வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வனச்சரக அலுவலர் கே.பெரியண்ணன் தலைமை வகித்தார். இம்முகாமில் 67நபர்க ளுக்கு பொதுமருத்துவம் மற்றும் கண் பரிசோதனைகள் நடத்தப் பட்டது.