ஈரோடு, டிச. 28- பஞ்சப்படியை மறுப்பது அராஜகத்தின் உச்சம் என ஓய்வதியர் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித் துள்ளது. ஒன்றிய, மாநில அரசு மற்றும் பொதுத் துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கி ணைப்புக்குழுவின் சார்பில் தேசிய ஓய்வூ தியர் தினக் கருத்தரங்கம் ஈரோட்டில் தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கக் கட்டடித்தில் நடை பெற்றது. கருத்தரங்கிற்கு ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்ட தலைவர் என்.மணி பாரதி தலைமை தாங்கினார். செயலாளர் என். ராமசாமி வரவேற்றார். தட்சிண ரயில்வே பென்சனர்ஸ் யூனியனின் மாநிலச் செய லாளர் ஆர்.இளங்கோவன் சிறப்புரை யாற்றினார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத் தில் பணியாற்றி ஓய்வு பெற்ற 86 ஆயிரம் ஊதியர்களுக்கு 86 மாத காலமாக பஞ்சப் படி வழங்கப்படவில்லை. முந்தைய அதிமுக அரசு பஞ்சப்படியை நிறுத்தி வஞ்சனை செய்தது. நாங்கள் பதவிக்கு வந்தால் நூறு நாட்களில் பிரச்சனை தீரக்கப்படும் என சென்ற ஆண்டு பதவி ஏற்ற திமுக உறுதிய ளித்தது. ஆனால் பதவி ஏற்று 1.5 ஆண்டு கள் ஆகியும் பிரச்சனை தீர்க்கப்படவில்லை. மனு கொடுத்தல், ஆர்ப்பாட்டம், முற்றுகை, மறியல் என பல வடிவங்களில் அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர். அத் துடன் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந் தனர். தமிழக அரசு போக்குவரத்து ஓய்வூதியர் களின் கோரிக்கையின் மீது எந்த வித பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை. தனது நிலை பாட்டையும் தெளிவாக தெரிவிக்கவில்லை. மாறாக நீதிமன்றம் பஞ்சப்படி வழங்க உத்தர விட்டும் அந்த உத்தரவிற்கு தடையாணை பெற்றது. இது ஓய்வூதியர் விரோத செயல் மட்டுமின்றி அராஜகத்தின் உச்சம் ஆகும். எனவே தமிழகத்தின் 9 மையங்களில் நடைபெறவுள்ள மறியல் போராட்டம் வெற்றி பெற வேண்டும். தாமதிக்காமல் பஞ்சப்படி உடனடியாக பட்டுவாடா செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிறைவாக போக்குவரத்து ஓய்வூதியர் சங்கத் தலைவர் பி.ஜெகந்நாதன் நன்றி கூறி னார். கருத்தரங்கில் ஏராளமான ஓய்வூதியர் கள் கலந்து கொண்டனர்.