அவிநாசி, ஆக.20 - பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் அவிநாசி ஒன்றியம் போத்தம்பாளையம், கருணைபா ளையம் உள்ளிட்ட கிராமங்களில் கால்நடை களோடு புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 வீதம் உயர்த்து தர வேண்டும். ஆவின் நிறுவனத்தில் நாள் ஒன்றுக்கு ஒரு கோடி லிட்டர் பாலை கொள்முதல் செய்ய வேண் டும். ஆவின் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள 300 கோடி ரூபாய் இழப்பை தமிழக அரசு உட னடியாக வழங்க வேண்டும். பால் கொள்மு தல் பாக்கி பணத்தை முழுவது மாக வழங்க வேண்டும். குழந்தைகள் சத்து ணவு திட்டத்தில் பால் பவுடரை சேர்த்து வழங்க வேண்டும். தீபாவளிக்கு முன் பால் உற்பத்தியாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர் சங்கம் சார்பில் கால்நடைகளோடு புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத் திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் வேலுச் சாமி, மாவட்ட தலைவர் எஸ்.கே.கொளந்த சாமி, ஒன்றிய நிர்வாகி குமாரசாமி, விவசாய சங்க மாவட்ட துணைச்செயலாளர் வெங்க டாசலம், ஒன்றிய தலைவர் முத்துரத்தினம், ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, நிர்வாகிகள் சுப்பிரமணி, கருப்புசாமி, மணி, பால் கூட்டுறவு சங்க தலைவர் சின்னசாமி, தங்கவேல் உட்பட பலர் கலந்து கொண்ட னர். சடையம்பதி சடையம்பதியில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் முன்பு வியாழனன்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத் தின் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பால் கூட்டுறவு சங்க தலைவர் எஸ்.கருப்பு சாமி தலைமை வகித்தார். இந்த போராட்டத் தில் விருமாண்டம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுசங்க முன்னாள் தலைவர் எஸ்.கே.கந்தசாமி, பால் கூட்டு றவு சங்க உறுப்பினர்கள் எஸ்.கே.ராமசாமி, எஸ்.சி.சின்னச்சாமி, பழனிச்சாமி, சுசீலா, சுமதி, காளியம்மாள், லோகம்பாள் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர்கள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.கே. கொளந்தசாமி உரையாற்றினார். இந்த போராட்டத்தில் பால் கூட்டுறவு சங்க உறுப்பி னர்கள் ஏராளமானேர் கலந்து கொண்டனர்.