பள்ளிபாளையம், மார்ச் 30- அரசு ஊழியர்கள் போல் அங்கன்வாடி ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுமுறை விட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை முன்வைத்து, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க ஊழியர்கள் பள்ளிபாளையத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் ஒட்டமெத்தை ஐசிடிஎஸ் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய தலைவர் ம.ஜெயா தலைமை ஏற்றார். இதில், ஒன்றிய செயலாளர் அம்பிகா, ஒன்றிய பொருளாளர் மகேஸ்வரி ஆகி யோர் கோரிக்கைகள் குறித்து உரை யாற்றினர். இதில், பத்து குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் பிரதான மையங்களை மினி மையமாக்கு வதையும், ஐந்து குழந்தைகளை குறைவாக இருக்கும் மினி மையங் களை பிரதான மையத்தோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். அங்கன்வாடி பணியா ளர்களுக்கு கூடுதல் பொறுப்பை அளிக்க கூடாது, முறைப்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும், மகப்பேறு விடுப்பு ஒரு வருடம் அரசு ஊழி யர்கள் இருப்பது போல் அங்கன் வாடி ஊழியர்களுக்கும் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை கள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப் பட்டது.
சிஐடியு மாவட்ட தலைவர் எம். அசோகன் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து உரையாற்றினார். இதில், திரளான அங்கன்வாடி ஊழி யர்கள் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். எலச்சிபாளையம் இதே கோரிக்கைகளை முன் வைத்து, அங்கன்வாடி ஊழியர் சங்கம் சார்பில் எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தம் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில், சங்கத்தின் மாவட்ட துணைத் தலை வர் க.மணிமேகலை தலைமை ஏற் றார். இதில், சிஐடியு தலைவர் கே.எஸ்.வெங்கடாசலம், உதவி செயலாளர் எஸ்.சுரேஷ், சத்துணவு ஊழியர் சங்கம் மாவட்டத் தலைவர் பி.தங்கராஜ், ஒன்றிய செயலாளர் செ.சுசீலா உள்ளிட்டோர் உரை யாற்றினர்.