districts

img

ஆட்டோ தொழிலாளர்களுக்கு நிவாரணம் கேட்டு ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், மே 15- 6 மாத காலத்திற்கு எப்சி, டாக்ஸ், இன்சூரன்ஸ் ஆகிய வற்றிலிருந்து விதிவிலக்கு கொடுக்க வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களு க்கு ரூ 15 ஆயிரம் நிவாரண தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் ஆட்டோ ஸ்டாண்டு முன்பு சிஐடியு ஆட்டோ தொழிலா ளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட முயன்றனர். ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சி.சண்முகம், செயலாளர் அ. ரெங்கநாதன், சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.அகஸ்டின் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊரடங்கு உள்ளதால் ஆர்ப் பாட்டம் நடத்த அனுமதி இல்லை எனக் கூறி காவல் துறையினர் வாக்குவா தத்தில் ஈடுபட்டனர். இதை யடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

;