districts

img

ஓய்வூதியர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஏப்.24- பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தேசிய ஓய்வூதியர்களின் கூட்டமைப்பு சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு அமல்படுத்தப்பட்டு வரும் புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட 18 மாதகால அகவிலைப்படி வழங்க வேண்டும். நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று 65 வயது முதல் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு  ஒருங்கிணைப்புக்குழு மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை ஏற்றார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டசெயலாளர் பி.கிருஷ்ணன், போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் அமைப்பின் மாநில இணைச்செயலாளர் கே.குப்புசாமி,அரசு அனைத்ததுறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பின்  மாவட்ட செயலாளர் எம்.பெருமாள், அஞ்சலக ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் ,எல்ஐசி ஓய்வூதியர் அமைப்பின் தலைவர் கே.ஆர்.சக்கரவர்த்தி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.