districts

img

சமதள பிளாட்பார்ம் இல்லாமல் வேலை செய்வது எப்படி?

திருப்பூர், நவ. 25 - திருப்பூர் ரயில்வே கூட்செட்டில் சமதள மான பிளாட்பார்ம் இல்லாமல் சுமைப்பணி  தொழிலாளர்கள் வேலை செய்யும் கொடு மைக்கு முடிவு கட்ட வலியுறுத்தி சிஐடியு  ரயில்வே கூட்செட் சுமைப்பணி தொழிலாளர்  சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் ரயில்வே கூட்செட் முன்பாக  வெள்ளியன்று நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்துக்கு கூட்செட் சுமைப்பணித் தொழிலாளர் சங்கத் தலைவர் எஸ்.கனகராஜ்  தலைமை வகித்தார். இதில் பிளாட்பார்ம்  இல்லாமல் வேலை செய்யும் கொடுமைக்கு  முடிவு கட்டவும், சமதளமாக பிளாட்பார்ம்  அமைத்துக் கொடுக்கவும், குடிநீர்,  குளியலறை வசதிகள் செய்து தர வேண்டும். அடையாள அட்டை உடனே வழங்கவும், இருசக்கர வாகன நிறுத்தம் ஏற்படுத்தித் தரவும், சுமைப்பணி தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ, பிஎப், சட்டப் பாதுகாப்பு வசதி செய்து தர வேண்டும். சுமைப்பணி தொழி லாளர்களுக்கு தனி நலவாரியம் அமைத்துத்  தரவும், வேலை நேரத்தை அதிகப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் சுமைப்பணித் தொழிலாளர் சம்மே ளனத்தின் மாநிலத் தலைவர் ஆர்.வெங்கிட பதி, சுமைப்பணித் தொழிலாளர் சங்க  மாவட்டத் தலைவர் எம்.ராஜகோபால், மாவட்டச் செயலாளர் கே.உண்ணிகிருஷ் ணன், சாலையோர வியாபாரிகள் சங்கச்  செயலாளர் பி.பாலன் உள்ளிட்ட நிர்வாகி கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உரை யாற்றினர். ரயில்வே சுமைப்பணி சங்க  செயலாளர் டி.ஆறுமுகம், பொருளாளர்  ஏ.சுப்பிரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் மற் றும் பெண் தொழிலாளர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத் தில் பங்கேற்றனர்.