districts

img

சிறுபான்மை மாணவர்கள் கல்வியை வஞ்சிப்பதா? பாஜக அரசை கண்டித்து திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூன் 22 - பாஜக அரசால் நிறுத்தப்பட்ட சிறு பான்மை மாணவர்களின் கல்வி உதவித் தொகை உடனடியாக வழங்க வலியு றுத்தி திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பாஜக அரசால் சிறுபான்மை மாண வர்களுக்கு நிறுத்தப்பட்ட பிரீ மெட்ரிக் ஸ்காலர்ஷிப், மௌலானா ஆசாத் தேசிய கல்வி ஊக்கத்தொகை ஆகிய வற்றை வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு  சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் மாநக ராட்சி அலுவலகம் முன்பு வியாழ னன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பின் மாவட்ட தலைவர் ஏ. முகமது ஜாபர் தலைமை ஏற்றார். இந்த  ர்ப்பாட்டத்தில், வெளிநாடுகளில் பயி லும் சிறுபான்மை மாணவர்களின் கல்விக்கடன், வட்டி மானியம் ஆகிய வற்றை நிறுத்தியதை கண்டித்து முழக் கங்கள் எழுப்பப்பட்டன.  இதில், மாவட்ட செயலாளர் வை. ஆனந்தன், மாவட்ட பொருளாளர் ஒய். தேவஅன்பு, மாவட்ட துணைத்தலை வர் ஏ.நிசார் அகமது, வடக்கு நகர செய லாளர் ஆர்.செந்தில்குமார், தெற்கு நகர  செயலாளர் பி.சௌந்தர பாண்டியன், மாவட்டக்குழு உறுப்பினர் தாராபுரம் சிராஜ் பாய், மாதர் சங்க மாவட்ட செய லாளர் கே.சரஸ்வதி உள்ளிட்ட பலர் பங் கேற்றனர்.