சேலம், மே 10- ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி செயலா ளரின் ஊழியர் விரோதப்போக்கை கண் டித்து, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங் கத்தின் சார்பில் சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட் சியரின் நேர்முக உதவியாளராக பணிபு ரிந்து வந்த சந்தோசம், ஊழியர் விரோத நடவ டிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித்துறை அலுவ லர் சங்கத்தினர், சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனரிடம் எடுத்துக்கூ றியதைத்தொடர்ந்து, அவர் அந்த பணியில் இருந்து மாற்றம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து மீண்டும் அதே மாவட்டத்தில் சந்தோசம் மாவட்ட ஊராட்சி செயலாளராக பணியில் சேர்ந்து தொடர்ச்சியாக ஊழி யர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரு கிறார். ஊழியர்களை பழிவாங்கும் நடவடிக் கைகளில் ஈடுபட்டு வருகிறார். மேலும், அவர் பணியில் நீடித்தால் பல்வேறு பிரச்சனைக ளுக்கு வழிகோலும். இந்நிலையில், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் மாநில மையம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என அறைகூவல் விடுக்கப்பட்டது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் அனைத்து வட்டார கிளையிலும் ஆர்ப்பாட் டங்கள் நடைபெற்றன. இதில், மாவட்ட ஊராட்சி செயலாளரின் தொடர்ச்சியான ஊழி யர் விரோதப் போக்கை கைவிட வேன்டும். மாவட்ட ஊராட்சி அலுவலக ஊழியர்கள் மீது காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் மனுவை திரும்பப்பெற வேன்டும். மாவட்ட ஊராட்சி செயலாளர் பொறுப்பில் இருந்து அவரை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முன்னதாக, இந்த ஆர்ப்பாட்டங்களில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் திருவேரங்கன், மாவட்டச் செயலாளர் ஜான் ஆஸ்டின் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.