உடுமலை, ஆக.22- 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய அனைத்து தொகுப்பு வீடுகளையும் அகற்றிவிட்டு புதிய வீடுகள் கட்டி தரக் கோரி விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் உடுமலையில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். குடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பாக செவ்வா யன்று விவசாயத் தொழிலாளர் சங் கத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில், ஒன்றிய பகுதியில் மக் கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள அனைத்து தொகுப்பு வீடுக ளையும் முறையாக அகற்றிவிட்டு. அரசு சார்பில் புதிய தொகுப்பு வீடு களை கட்டித்தர வேண்டும். குடிமங் கலம் ஒன்றியத்தில் இருக்கும் 23 ஊராட்சிகளிலும் முறையாக ஊரக வேலைத் திட்டத்தை செயல்படுத்தா மல் பெயருக்கு வேலை தரப்படுகி றது. ஆனால் ஊரக வேலை திட்டத் தின் கீழ் பொதுமக்கள் வேலை செய்து உள்ளதாக வருகை பதிவேடு களில் வரவு வைக்கப்பட்டு பணம் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படி ஊரக வேலை திட்டத்தில் நடைபெ றும் முறைகேடுகளை தடுக்க வேண் டும். தவறு செய்த அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டது. முன்னதாக நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு விவசாயத் தொழிலா ளர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் வலுப்பூரான் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் அ.பஞ்சலிங்கம் பேசி னார். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா ளர் என்.சசிகலா, விவசாய சங்கத் தின் ஒன்றியத் தலைவர் சுந்தர்ராஜ், ஒன்றியச் செயலாளர் ஸ்ரீதர், விவசா யத் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகி கள் தம்புராஜ், ஆறுமுகம், பழனி சாமி, சிவக்குமார், நாச்சிமுத்து மற் றும் மணியன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டார்கள். நிறைவாக குடிமங்கலம் வட்டார வளர்ச்சி அலு வலர் மகேந்திரனிடம் கோரிக்கை மனு தரப்பட்டது.