ஒரு வருடமாக நிலுவையில் உள்ள ஊதிய பாக்கியை வழங்க வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்கள் சேலம் பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கே.ராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில உதவித்தலைவர் ஆர்.ரமேஷ், மாவட்ட தலைவர் ஹரிஹரன், ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எம். செல்வம், பிஎஸ்என்எல் ஓய்வு பெற்றோர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.