கடலூர், சிவகங்கையில் ஊழியர் விரோத போக்கில் ஈடுபட்டு வரும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாயன்று (பிப்.25)ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கியூரி, செயலாளர் ராஜ்குமார்,பொருளாளர் ரமேஷ், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் லெனின் ஆகியோர் பங்கேற்றனர்.