districts

img

அரசு பள்ளிகள் முன்பு வேகத்தடை அமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஏப்.13- தீண்டாமை கொடுமையை தட்டி கேட்டதற்காக விடுதலை சிறுத்தை கள் கட்சியின் நிர்வாகி மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், குற்றவாளி களை கைது செய்யாமல் இழுத்தடிக் கும் காவல்துறையை கண்டித்து ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. தீண்டாமை கொடுமையை தட்டி கேட்டதற்காக  விடுதலை சிறுத்தை கட்சியின் சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர்  பெரிய காளை யன் மீது கொலைவெறி தாக்கல் நடத் தப்பட்டுள்ளது. இதில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யாமல் இழுத்தடிக்கும் காவல் துறையை கண்டித்து சத்தியமங்கலம் பேருந்து நிலையம் முன் விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு  விடு தலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட  செயலாளர் சிறுத்தை வளவன் தலைமை தாங்கினார். சிபிஎம்  மூத்த  தலைவர் கே.ஆர்.திருத்தணிக்காச் சலம் கண்டன உரையாற்றினார் சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன்,  மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.விஜயராகவன்,  வாசுதேவன்,  விடுதலை சிறுத்தை கட்சியின் முதன்மை செயலாளர் ஏ.சி.பாவரசு ஆகியோர் கண்டன உரையாற்றினார்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.