திருப்பூர், ஏப்.20- தொடரும் சாதி ஆணவப்படு கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றக்கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் வியாழனன்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரியில் மகன் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டதால் ஆத்தி ரமடைந்து மகன் மற்றும் தாயை, தந்தையே ஆணவப்படுகொலை செய் துள்ளார். இதே போல் தமிழகத்தில் தொடர்ந்து சாதி ஆணவப்படுகொலை கள் நடத்தப்படுகிறது. இதை தடுக்க தனிச்சட்டம் இயற்ற கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் ச. நந்தகோபால் தலைமையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் நல உரிமை இயக் கம் மாநில பொதுச்செயலாளர் விபிஎம். பன்னீர்செல்வம், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் சம்பத், பாலன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலா ளர் ஆர்.குமார், மாதர் சங்க மாவட்ட செயலாளர் கு.சரஸ்வதி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் சி.கே.கனகராஜ், ஆதி தமிழர் சனநாயக பேரவை நிறுவனத் தலைவர் அசு.பவுத்தம், தந்தை பெரி யார் திராவிடர் கழக மாவட்ட தலைவர் சண்.முத்துக்குமார், தேசிய புலிகள் கட்சி கட்சி ஜேகே.குணசேகரன், புரட்சி கர இளைஞர் முன்னணி வேலு, திக மைனர், டிஏஆர்ஏடிஏசி தெற்கு நகரச் செயலாளர் சஞ்சீவன் உட்பட திரளா னோர் பங்கேற்றனர். முடிவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் பாலமுரளி நன்றி கூறி னார்.