districts

img

விவசாயிகளை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து, ஐக்கிய விவசாயிகள் முன்னனி சார்பில், ஆர்ப்பாட்டம்

விவசாயிகளை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து, ஐக்கிய விவசாயிகள் முன்னனி சார்பில், ஈரோடு மாவட்டம், கோபி செட்டிபாளையம் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்ட ஓருங்கிணைப்பாளர் ஏ.எம்.முனுசாமி தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மாவட்டத் தலைவர் மாரிமுத்து, மாவட்ட துணைத் தலைவர் முத்துச்சாமி, மதிமுக நகர அவைத் தலைவர் சின்னய்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.