திருப்பூர், ஜன.30- தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி ஊழியர்களுக்கு தினசரி ஊதியம் கணக்கிட்டு நிலுவைத் தொகையுடன் வழங்கிட உயர் நீதி மன் றம் உத்தரவிட்டும், ஊதியம் வழங்கப்ப டாமல் உள்ளது. உடனடியாக நிலுவைத் தொகையுடன் கணக்கிட்டு ஊதியம் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர், குடிநீர்ப் பணியாளர், ஓட்டு நர், டிபிசி ஊழியர், ஒஎச்டி ஆபரேட்டர் களுக்கு தினசரி ஊதியம் நிர்ணயித்து 1.4.2023 முதல் கணக்கிட்டு நிலுவைத் தொகையுடன் உடனடியாக வழங்கிட வேண்டும். உள்ளாட்சி துறைகளில் அவுட்சோர் சிங் அரசாணைகளை திரும் பப் பெற வேண்டும். ஊராட்சிகளில் வேலை செய்யும் ஆப்பரேட்டர்கள், தூய்மைப் பணியாளர்கள், தூய்மைக் காவ லர்களை காலமுறை ஊழியர் ஆக்கிட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. சிஐடியு திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பி.பழனிசாமி தலை மையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்தில், பூண்டி நகர்மன்ற உறுப்பினர் பாலசுப்பிரமணியம், இடுவாய் ஊராட்சி தலைவர் கணேசன், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணி யம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் கே.உண்ணி கிருஷ்ணன், பொங்கலூர் விஸ்வநாதன் ஆகியோர் பேசினர். சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் நிறைவுரை ஆற்றினார். இதில், 600 க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட உள் ளாட்சி ஊழியர்கள் பங்கேற்றனர்.