districts

img

நிலுவை ஊதிய தொகையை விரைந்து வழங்கிடுக

நாமக்கல், ஏப்.6- ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், ஓஎச்டி ஆப்ரேட்டர் களுக்கான நிலுவை ஊதிய  தொகையை விரைந்து வழங்க வேண் டும் என வலியுறுத்தி ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர் கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், ஓஎச்டி ஆப்ரேட் டர்கள், தூய்மை காவலர்கள், பள் ளிக்கல்வி பணியாளர்கள் உள்ளிட்ட வர்களின்  அடிப்படை கோரிக்கை கள் நிறைவேற்ற வேண்டும். தூய்மை காவலர்களுக்கு மகளிர் குழு மூலம் சம்பளம் வழங்கும் நடை முறையை ரத்து செய்து ஊராட்சி மூலம் சம்பளம் வழங்க வேண்டும். பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர் களுக்கு பிஎப், இஎஸ்ஐ திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழி யர்கள் சங்கத்தினர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங் கத்தின் மாவட்ட தலைவர் வீ.கண் ணன் தலைமை வகித்தார். இதில், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.சுப்பிரமணியன், மாவட்ட செய லாளர் ந.வேலுசாமி, மாவட்ட தலை வர் எம்.அசோகன், மாவட்ட உதவிச் செயலாளர் கு.சிவராஜ், சு.சுரேஷ் உட்பட திரளானோர் கலந்து கொண் டனர்.