districts

img

நியாயம் கேட்டவர்கள் மீது பொய் வழக்கு மாதர், வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 சேலம், மே 29 - பாலியல் சீண்டலில் ஈடுபட்ட  சமூக விரோதிகளுக்கு ஆதரவா கவும், நியாயம் கேட்ட வாலிபர்  சங்கத்தினர் மீது பொய் வழக்கு பதிவு செய்த காவல்துறையினரை கண்டித்து சேலத்தில் வாலிபர்,  மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். சேலம், எருமாபாளையம் அடுத்துள்ள ஆலமரத்துகாடு பகுதி யில், குமரன் கார்மெண்ட்ஸ் நிறு வனம் இயங்கி வருகிறது. இங்கு  ஆண்கள், பெண்கள், வட மாநில  தொழிலாளர்கள் என ஏராளமா னோர் பணியாற்றி வருகின்றனர். இந்த கார்மெண்ஸில் பணியாற்றும்  ஆண்கள் சிலர், கழிவறைகளை பயன்படுத்தாமல் திறந்தவெளியில்  மலம் கழித்து வருகின்றனர். குடி யிருப்பு பகுதிகள் அதிகம் உள்ள  இந்த பகுதியில் திறந்த வெளியில்  மலம் கழிப்பதும், இங்குள்ள குடி யிருப்பில் உள்ள பெண்களிடம் சிலர் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.  இதனைத்தொடர்ந்து, இப் பகுதியில் உள்ள பெரியவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி, ஆண்கள் கழிவறையை மட்டும் தான் பயன்படுத்த வேண் டும். திறந்தவெளியில் மலம்  கழிக்க கூடாது என முடிவெடுக்கப் பட்டது. இருப்பினும் சிலர் சமூக விரோத நடவடிக்கைகளை தொடர்ந்து ஈடுபட்டே வந்துள் ளனர். இதனையடுத்து, கடந்த சில  நாட்களுக்கு முன்பு, அங்குள்ள வர்கள் வாலிபர் சங்கத்திடம் இது குறித்து அப்பகுதியினர் முறையிட்டுள்ளனர். வாலிபர் சங்கத்தின் நிர்வாகிகளும், சம்பந்தப்பட்ட கார்மென்ஸில் விசாரிச்ச சென்றபோது, இரு தரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து காவல் நிலை யத்திற்கு புகார் சென்றபோது, விசாரித்த கிச்சிபாளையம் காவல் துறையினர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை  எடுக்கவில்லை. மாறாக, நியாயம்  கேட்க சென்ற வாலிபர் சங்க தலை வர்கள் மீது பொய் வழக்கு பதிந் துள்ளனர். இது தொடர்பாக ஒரு வரை சிறையிலும் அடைத்துள் ளனர். இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிய வேண்டும் என  வாலிபர் சங்கத்தினர் கேட்டுக் கொண்ட பிறகும், ஒருதலை பட்ச மாக வழக்கு குற்றவாளிகளுக்கு சாதமாக வாலிபர் சங்கத் தலை வர்கள் மீது பொய் வழக்குப் பதிவு  செய்யப்பட்டுள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட வாலிபர்  சங்க நிர்வாகியை அழைத்துச் செல்வதற்கு முன்பாக பொது மக்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் அவமானப்படுத் தப்பட்டுள்ளார்.

இதனையறிந்த வாலிபர் சங்க கிழக்கு மாநகர  நிர்வாகி பிரபாகரன், காவல் துறையினரிடம் “ஒருதலை பட்ச மாக நீங்கள் செயல்படுகிறீர்கள் பெற்றோர்கள் மற்றும் குடும்பத் தினர் முன்னிலையில் ஒருமை யில் பேசி நடந்து கொள்கிறீர்கள் இது தவறானது” எனவும் “தவறு  செய்யாதவர் மீது வழக்கு தொடர்ந்து குற்றம் சாட்டப்பட் டவர்கள் மீது எந்த நடவடிக்கை யும் நீங்கள் எடுக்கவில்லை”  என கிச்சிப்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் சத்தியமூர்த்தி யிடம் தெரிவித்துள்ளார். அதற்கு பிரபாகரன் மீதும் பொய் வழக்கு போட்டுள்ளனர். சமூக விரோதிகளுக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறையினரை கண்டித்தும், உடனடியாக பிரபா கரன் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும்.  குமரன் கார்மெண்ஸில் பெண் களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அனைவர் மீதும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சேலம் மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் முன்பு அனைத்திந்திய  ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்  கூட்டாக ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.  சங்கத்தின் மாவட்ட தலை வர் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், வாலிபர் சங்க மாவட்ட செய லாளர் பெரியசாமி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.எம்.தேவி மாநில குழு உறுப்பினர் ஐ.  ஞானசௌந்தரி உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.