கோவை, அக்.22- தென்னை விவசாயிகளின் வாழ்வாதா ரத்தை பாதுகாக்க, ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யக் கோரி, தென்னை விவசாயிகள் சங்கத்தினர் செவ்வாயன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். நியாய விலை கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்கிட வேண்டும். தென்னை சார் தொழில்கள் வளர ஏற்றுமதி வாய்ப்புகளை ஊக்கப்படுத்த வேண்டும். மண்டல தென்னை வளர்ச்சி வாரிய அலுவ லகத்தை பொள்ளாச்சியில் அமைத்திட வேண்டும். தென்னையைத் தாக்கும் ஈரோ பைய்டு கருந்தாழை புழுக்கள் வேர்ப்புழு வெள்ளை ஈ. கேரளா மற்றும் தஞ்சாவூர் வாடல் நோய்களை கட்டுப்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் துரிதமாக செயல்பாட்டு நோயை கட்டுப்படுத்த உரிய மருந்து களையும் வழங்கிட வேண்டும். முழுமை யான பயிர் காப்பீடு அனைத்து தென்னை மரங்களுக்கும் அமுல்படுத்த வேண்டும். செயல்படாத காயர் வாரியத்தின் செயல் பாட்டை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தினர் செவ்வா யன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி திரு வள்ளுவர் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, அச்சங்க மாநிலத் தலைவர் எஸ்.ஆர். மதுசூதனன் தலைமை வகித்தார். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலை வர் வி.பி. இளங்கோவன், மாவட்டச் செய லாளர் வி.ஆர்.பழனிச்சாமி, தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் ஏ.காளப்பன், கோவை மாவட் டச் செயலாளர் ஸ்டாலின் பழனிச்சாமி, மாவட் டப் பொருளாளர் ரவீந்திரன் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.