திருப்பூர், நவ. 14 - அரசு மருத்துவமனை களில் ஊழியர்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத் துறை சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. திருப்பூர் மருத்துவக் கல் லூரி மருத்துவமனை அலுவ லக வளாகத்தில் வியாழனன்று கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இப்போராட் டத்துக்கு அரசு ஊழியர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் ஏ.ராணி தலைமை ஏற் றார். தமிழ்நாடு மருத்துவத் துறை நிர்வாக அலுவலர் சங்க மாநில துணைத் தலை வர் ஜெ.அந்தோணி ஜெயராஜ் கோரிக் கையை விளக்கிப் பேசினார். தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில துணைத்த லைவர் அன்னப்பூரணி, எம்ஆர்பி செவிலியர் மேம்பாட்டுச் சங்க மாநில இணைச் செயலா ளர் பெஜாக்சின் ஆகியோர் உரையாற்றினர். திருப்பூர் தொழிற்பயிற்சி அலுவலர் சங்கச் செயலாளர் பசுபதி சிறப்புரை ஆற்றினார். தமிழ்நாடு மருத்துவத்துறை நிர்வாக அலுவ லர் சங்க மாவட்ட துணைத் தலைவர் ஜெயக் குமார் நன்றி கூறினார். மருத்துவமனை ஊழி யர்கள் மற்றும் துறைவாரி சங்கத்தினர் இதில் பங்கேற்றனர்.