districts

img

நகர்புற வேலை திட்டத்தில் வேலை கேட்டு ஆர்ப்பாட்டம்

உடுமலை, ஜூலை 22- நகர்ப்புற வேலை திட்டத்தில்  வேலை கேட்டு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார் பில் 22ஆம் தேதி சனிக்கிழமை கொமர லிங்கம் பேரூராட்சி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர்ப்புற வேலைத் திட்டத்தை விரிவுபடுத்தும் வகை யில் ஒரு மாவட்டத்திற்கு ஒரு பேரூராட் சிக்கு நகர்ப்புற வேலை தருவதாக அரசு அறித் துள்ளது. இதன்படி  திருப்பூர் மாவட்டத் தில் கொமரலிங்கம்  பேரூராட்சி தேர்வு செய் யப்பட்டது.  கடந்த ஆண்டு இத்திட்டம் துவங்கி சில மாதங்கள் மட்டுமே வேலை  வழங்கப்பட்டது. பிறகு நிறுத்தப்பட்டுவிட் டது. தொழிலாளர்களுக்கு நகர்ப்புற திட்டத் தின் கீழ் வேலை வழங்கப்படவில்லை. அடை யாள அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்கள் பலருக்கும் அட்டை வழங்கவில்லை  உடனடி யாக நகர்ப்புற திட்டத்தில் வேலை வழங்க வேண்டும். அடையாள அட்டை கேட்டு விண் ணப்பித்த அனைவருக்கும் அட்டை வழங்க  வேண்டும் என்று அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மடத் துக்குளம் தாலூக்கா துணைத் தலைவர் காந்தி தலைமை தாங்கினார். ஒன்றியச் செய லாளர் மாசாணம் முன்னிலை வகித்தார். விவ சாய தொழிலாளர் சங்க மாவட்டச்செயலா ளர் அ.பஞ்சலிங்கம், மார்க்சிஸ்ட் கட்சியின்  தாலூக்கா செயலாளர் ஆர்.வி.வடிவேல்,  கரும்பு விவசாயிகள் சங்கத்தின் செயலா ளர் எம்.எம்.வீரப்பன், விவசாயிகள் சங்க ஒன் றிய செயலாளர் வி.ஈஸ்வரன், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ராஜரத்னம், மாதர் சங் கத்தின் மாவட்டக்குழு உறுப்பினர் ராதா உள் ளிட்ட திரளானோர் கலந்து கொண்டார்கள். இறுதியாக பேரூராட்சி அலுவலரிடம் வேலை  கோரும் மனு வழங்கப்பட்டது.