districts

img

குடிமனைப்பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஏப்.27- ஈரோடு மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.964.84 கோடி மதிப்பீட்டில் 54 திட்ட பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது என அதிகா ரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்ட ஆட்சியர் கூட்ட ரங்கில், ஒன்றிய அரசின் நிதி உதவியு டன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான மாவட்ட வளர்ச்சி ஒருங் கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் செவ்வாயன்று, குழு தலைவர்  கணேசமூர்த்தி எம்.பி. தலைமையில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிகா ரிகள் பேசுகையில், ஈரோடு மாவட்டத் தில் தனிநபர் இல்லக்கழிப்பறைகள் பயன்பாட்டில் உள்ளதை உறுதி செய் வதற்கு ஒவ்வொரு ஊராட்சியிலும் ஆய்வு அட்டைகள் மற்றும் ஆய்வுப் பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வருகி றது. ஈரோடு மாவட்டத்தில் பிரதம மந் திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் 2 ஆயிரத்து 339 குடியிருப்பு கள் ரூ.3 கோடியே 92 லட்சம் மதிப்பீட் டில் கட்டி முடிக்க, நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டம்

ஈரோடு மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.964 கோடியே 84 லட்சம் மதிப்பீட்டில் 54 திட்ட பணிகள் தேர்வு செய்யப்பட்டு, 17 பணிகள் ரூ.271 கோடியே 66 லட்சம் மதிப் பீட்டில் முடிக்கப்பட்டுள்ளது. மேலும், 37 பணிகள் ரூ.693 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. கோபி, பவானி, சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகளில் பையோமைனிங் முறையில் குப்பை களை பிரித்தெடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம் பாட்டு வாரியம் சார்பில் அனைவருக் கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 1,184 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் பயனாளிகள் சுயமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 7 ஆயிரத்து 362  வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் குழந்தைகள், கர்ப்பிணி கள், பாலூட்டும் தாய்மார்கள், வளரி ளம் பெண்கள் ஆகியோருக்கு பல் வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது, என்றனர்.

பெண் கல்வி கராத்தே பயிற்சி

மேலும், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 7 லட்சத்து 62 ஆயி ரத்து 989 குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெற்று வருகின்றனர். பொது விநி யோக திட்டத்தின் கீழ் உணவு பொருட் கள் போதிய அளவில் இருப்பில் வைக் கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பள் ளிக்கல்வி திட்டத்தின் கீழ் பள்ளி செல்லா குழந்தைகளுக்கு பயிற்சிகள், கஸ்தூரிபா காந்தி பெண்கள் உண்டு உறைவிடப்பள்ளிகள், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான கல்வி திட்டம், போக்குவரத்து மற்றும் பாது காவலர் வசதி, பெண் கல்வி கராத்தே பயிற்சி உள்ளிட்ட பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 1,924 பயனா ளிகள் பயனடைந்துள்ளதாக அதிகாரி கள் தெரிவித்தனர். முன்னதாக, இக்கூட்டத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற் றும் கண்காணிப்பு குழு இணைத்தலை வர் கே.சுப்புராயன் எம்.பி., மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்னி, மாநக ராட்சி மேயர் நாகரத்தினம், மாவட்ட ஊராட்சி தலைவர் நவமணி கந்தசாமி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மது பாலன், மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, மகளிர் திட்ட இயக்குனர் கெட்ஸி லீமா அமலினி உட் பட பலர் கலந்து கொண்டனர்.