districts

img

அமலாக்கத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சேலம், ஜன.11- ஏழை விவசாயிகளின் நிலத்தை அபக ரிக்கும் நோக்கில் செயல்படும் பாஜக நிர்வாகிக்கு துணைபோகும் அமலாக்கத் துறையை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள  ராமநாயக்கன்பாளையம், காராமணி திட்டு பகுதியைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணன், கண் ணையன். இவர்களின் நிலங்களை அபக ரிக்க பாஜக சேலம் பொறுப்பாளர் குணசேக ரன் தொடர்ந்து முயற்சித்து வருகிறார். அதன்ஒருபகுதியாக அமலாக்கத்துறையி னர் விவசாயிகளுக்கு, அவர்களின் சாதி  பெயரை குறிப்பிட்டு நோட்டீஸ் அனுப்பி யுள்ளனர். இதற்கு தமிழ்நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில், நிலங்களை அபகரிக்க முயற்சிக்கும் பாஜக  நிர்வாகிக்கு துணைபோகும் அமலாக்கத் துறையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அக்கட்சியின் மாவட்டச் செயலா ளர் மோகன் தலைமையில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தில், திரளானோர் கலந்து கொண் டனர்.