ஈரோடு, நவ. 4- திராவிடர் மாணவர் கழக சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. சூரம்பட்டி நால்ரோட்டில் வெள்ளியன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட திராவிடர் மாணவர் கழக தலைவர் பி.மணிமாறன் தலைமை தாங்கினார். மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம் துவக்கிவைத்து உரையாற்றினார். பேராசிரியர் ப.காளிமுத்து கண்டன உரை யாற்றினார். இதேபோன்று, திராவிட மாணவர் கழகம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பின் மாவட்ட தலைவர் அ.பாஸ்கர் தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.