districts

img

ஒப்பந்தப் பெண் ஊழியர்களை அச்சுறுத்துவதா? அரசு மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருப்பூர், அக்.29- திருப்பூர் மருத்துவக்  கல்லூரி மருத்துவமனை யில் பணியாற்றும் பெண்  ஊழியர்களை அச்சுறுத்தும்  வகையில் நடந்து கொள் ளும் அதிகாரிகளைக் கண் டித்து, அவர்கள் மீது நிர்வா கம் உடனடியாக நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி  சிஐடியு சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் தேசிய சுகாதார இயக்கம் (என்எச்எம்) ஒப்பந்த பெண் ஊழி யர்களை சில குறிப்பிட்ட அதிகாரிகள் தொடர்ந்து அவமானப்படுத்துகின்றனர். மேலும் சட்டப்படி தர வேண்டிய ஊதியம் தரா மல் குறைந்த ஊதியம் தருகின்றனர். எனவே  ஊதிய உயர்வு வழங்க வேண்டும். மேலும் அச்சுறுத்தும் வகையில் அதிகாரிகள் நடந்து  கொள்வதைக் கண்டித்தும் செவ்வாயன்று திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு மாவட்டக்குழு உறுப்பி னர் சிவராமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், துணைத் தலை வர் கே.உண்ணிக்கிருஷ்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி, மாவட்டத் துணைத் தலைவர் பி.பாலன் உட்பட மருத்துவமனை ஊழியர்கள் திரளானோர் பங்கேற்றனர்.