districts

img

யானை வழித்தடத்திற்காக பழங்குடியின மக்களை வெளியேற்றுவதை கண்டித்து, ஆர்ப்பாட்ட

யானை வழித்தடத்திற்காக பழங்குடியின மக்களை வெளியேற்றுவதை கண்டித்து, கூடலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் துரைசாமி, மாவட்டச் செயலாளர் பன்னீர்செல்வம், ஏரியா கமிட்டி தலைவர் அனிபா மாஸ்டர், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஏ.வி.ஜோஸ், எம்.வி.ஜோஸ், மணிகண்டன், சம்சுதீன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.