நாமக்கல், ஜூன் 14- கோட்டாட்சியர் ரத்து செய்து உத்த ரவு பிறப்பிக்கப்பட்ட பட்டாவிற்கு பத்திர பதிவு செய்த அலுவலரை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்தி ரம் ஒன்றியம், தென்னமரத்துபாளை யத்தில் காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் பெரியண்ணன். இவ ருக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என அதே ஊரைச் சேர்ந்த சாந்தி என்பவர் வருவாய் கோட் டாட்சியரிடம் மனு அளித்தார். இதனடிப் படையில் விசாரணை செய்ததில், 15.02.2023 ஆம் தேதி பெரியண்ணன் என்பவருக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய கோட்டாச்சியர் உத்தரவு பிறப்பித்தார். இதனை பெரியண்ணன் மறைத்து, அவரது மனைவி பாப்பாத்தி பெயரில் ரத்து செய்யப்பட்ட பட்டாவை வைத்து, மல்லசமுத்திரம் கிரைய அலுவலகத் தில் 26.04.2023 அன்று தான செட்டில் மெண்ட் கிரயம் செய்துள்ளார். அடுத்த நாளே, திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் உத்தரவை வைத்து சாந்தி மற்றும் அதே ஊரைச் சார்ந்த பொதுமக்கள் புகார் மனு அளித்து பத் திரப்பதிவு ரத்து செய்ய வேண்டும் என்று மனு அளித்தனர். இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மாவட்ட பதிவு துறை அலுவலகத்திற் கும், மாவட்ட ஆட்சியருக்கும் இரண்டு முறை மனு அளித்தனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முறைகேடாக பதிவு செய்யப்பட்ட பத்திர பதிவை ரத்து செய்ய வேண்டும். பத்திரப்பதிவுத் துறை அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரச்சனைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி மல்லசமுத்திரம் சார் பதிவாளர் அலுவ லகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியின் ஒன்றிய செயலாளர் வீ.தேவராஜன் தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சு.சுரேஷ், எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ்.வெங்கடா சலம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.