திருப்பூர், ஜூலை 20 – மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி இனப் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வல மாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொ டுமைக்கு உள்ளாக்கிய காட்டுமிராண்டித் தனத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. அனுப்பர்பாளையம் பஸ் நிலையம் முன் பாக வியாழனன்று நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத் தில், பல மாதங்களாக நீடிக் கும் மணிப்பூர் வன்முறைக் கல வரத்துக்கு காரணமான பாஜக வின் இழிவான அரசியலை யும், பிரதமர் மோடியின் செயல்படாத கபடத்தனத்தை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மார்க்சிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் நகரக்குழு உறுப்பினர் சுகுமார் தலைமை யில் கட்சியின் மூத்த தோழர் வி.பி.சுப்பிரமணி யம், சிஐடியு பாத்திர சங்கச் செயலாளர் கே. குப்புசாமி, கட்சியின் நகரச் செயலாளர் ச. நந்தகோபால் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். இதில் பெண்கள் உள்பட திரளா னோர் கலந்து கொண்டனர்.