தாராபுரம், ஜன.2- தாராபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தீண் டாமை வன்கொடுமைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திருப்பூர் கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தாராபுரம் அண்ணாசிலை முன்பு கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நா.தமிழ்முத்து தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீரில் மனித மலம் கலந்த சாதி வெறியர்களை கண்டித்தும், தீண்டாமை வன்கொ டுமைகளை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப் பாட்டத்தில் மண்டல அமைப்பு செயலாளர் சுசிகலைய ரசன், நகர செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலா ளர் தனபால் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செய லாளர் அபுதாகிர் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் ஒண்டி வீரன், அபிபுர் ரகுமான், முனீஸ்வரன், அலாவுதீன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.