திருப்பூர், ஜூலை 21 - மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின பெண்களை நிர்வா ணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் சித்திரவதை செய்யப்பட்ட விவகாரத்திற்கு கண்டனம் தெரி வித்தும், அதைக் கட்டுப்படுத்தத் தவறிய ஒன்றிய பாஜக அர சைக் கண்டித்தும் திருப்பூரில் ஆதித்தமிழர் பேரவை ஆர்ப் பாட்டம் நடத்தியது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் நடைபெற்று வருகிறது. இதைக் கட்டுப் படுத்தத் தவறிய மத்திய, மாநில பாஜக அரசுகளுக்கு கண் டனம் தெரிவித்தும், இந்த கொடூர வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தியும் திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை ஆதித்தமிழர் பேரவை நடத்தியது. இதில் பெண்கள் உள்ளிட்ட அந்த அமைப்பின் நிர்வாகிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.