தருமபுரி, ஆக. 8- அரூர் அருகே பழங்குடியி னரின் குடிசையை இடித்த அதி காரிகள் மீதும், இடிக்க தூண்டிய ஆதிக்க சாதியினர் மீதும் சட்டரீதி யான நடவடிக்கை எடுக்க வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்ப தாவது, தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்திற்குட்பட்ட வீரப்பநாய்க் கன்பட்டி கிராமத்தில் பழங்குடி மலசர் இனத்தை சேர்ந்தவர் மாணிக்க பூசாரி. இவர் அங்குள்ள அறநிலையத்துறைக்கு சொந்த மான கோயிலில் 4 தலைமுறையாக பூசாரியாக ஊதியமின்றி சேவை யாற்றியுள்ளார். இவருக்கு ஒரு மகனும், இரு மகள்களும் உள்ள னர். அனைவருக்கும் திருமண மாகிய நிலையில், இவரது ஒரு மகள் பூவழகி, கணவனால் கைவி டப்பட்டவர். இவருக்கு 3 குழந்தை கள் உள்ளன. கடந்த சில ஆண்டு களுக்கு முன் மாணிக்க பூசாரி இறந்துவிட்டார். இவரது மனைவி பார்வதி, மகன் வேடியப்பன், மகள் பூவழகி ஆகியோர் வீரப்பநாய்க் கன்பட்டி கிராமத்தில் உள்ள (சர்வே எண். 17/2) 1 ½ சென்ட் அரசு தரிசு நிலத்தில் குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். இக்குடி சையை மாணிக்கம் பூசாரி கட்டி யுள்ளார். இதனை பொறுத்துக் கொள்ளாத ஆதிக்க சாதியை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் ராமலிங்கம் மற்றும் பிரபாகரன் ஆகியோர் குடிசையை அகற்றக் கோரி மனு கொடுத்தனர். இதன்பேரில், வருவாய்த்துறை யினர் எவ்வித முன்னறிவிப்புமின்றி ஜேசிபி இயந்திரத்தை மூலம் குடி சையை அகற்றினர். இதில் ரூ. 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மதிப்பி லான வீட்டு உபயோக பொருட்கள் சேதமடைந்தன. இதில், மன உளைச்சலுக்கான மாணிக்கம் பூசாரியின் மனைவி பார்வதி தீக் குளிக்க முயன்றுள்ளார். முன்ன தாக, இவர்கள் குடியிருக்கும் குடி சைக்கு பட்டா கேட்டு பல முறை வட்டாட்சியரிடம் மனு கொடுத் துள்ளனர். ஆனால் எவ்வித நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை. பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் பழங்குடியின குடிசையை, கிராம நிர்வாக அதிகாரி மற்றும் கிராம வருவாய் அலுவலர், ஊராட்சிமன்றத் தலைவர் ராம லிங்கம் மற்றும் பிரபாகரன் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிய வேண்டும். இவர்கள் குடியிருந்து குடிசைக்கு பட்டா வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை, பாதிக்கப்பட்ட மாணிக்கம் பூசாரியின் மகன் வேடி யப்பன் குடும்பத்தார் மற்றும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் பி.குமார், வட்டக்குழு உறுப்பினர் பி.வி.மாது, எஸ்.கே. கோவிந்தன், முருகன் ஆகியோர் அளித்தனர்.