கோபி, அக்.26- கோபிசெட்டிபாளையம் அருகே நீர்நிலை எனக்கூறி அங்கிருந்த குடி யிருப்புகள் அகற்றப்பட்ட நிலையில், அரசு சார்பில் மாற்று இடம் வழங்க வேண்டும் என பெண்கள் கண்ணீர் மல்க வலியுறுத்தியுள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள வாய்க்கால் மேடு கீழ்பவானி வாய்க்கால் பகுதி யில் நான்கு குடும்பங்கள் பல ஆண்டு காலமாக வசித்து வந்தனர். இந்நிலை யில், நீதிமன்றத்தின் உத்தரவு என்கிற பெயரில், வாய்க்கால் மேடு பகுதி யில் உள்ள குடியிருப்புகளின் மின் சார இணைப்பு துண்டிக்கப்பட்டு, குடி யிருப்புகள் இயந்திரத்தை கொண்டு இடித்து அகற்றினர். முன்னறிவிப் பின்றி திடீரென ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் செய்வதறியாமல் வீட்டு உபயோக பொருட்களை எங்கு எடுத்து செல்வது என பாதிக்கப்பட்ட பெண்கள் அழுது கண்ணீர் வடித்த னர். ஏற்கனவே, நீர்நிலை என கார ணம் கூறி பல ஆண்டுகளாக வசித்து வரும் பொதுமக்கள் மற்றும் குடியி ருப்புகளை அகற்ற கூடாது. அப்படி அகற்றும் பட்சத்தில் அவர்களுக்கு மாற்று இடம், வீடு வழங்க வேண் டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. தற்போது நீதிமன்ற உத்த ரவை காரணம் காட்டி, குடியிருப்பு கள் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்ப டுத்தியுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட குடும் பத்தினர் கூறுகையில், தாங்கள் பல ஆண்டுகளாக இப்பகுதியில் குடியி ருந்து வருகிறோம். தற்போது ஆக்கிர மிப்பு என்கிற பெயரில் தங்களது குடி யிருப்புகள் அகற்றப்பட்டுள்ளதால் என்ன செய்வதென்றே தெரியாமல் நடுத்தெருவில் நிற்கிறோம். தமிழக அரசு மாற்று இடம் அல்லது அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு வழங்க வேண் டும் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.