கொல்லிமலை, மே 4- கொல்லிமலை அருகே உள்ள அரசு சமுதாயக் கூடத்தை தனியார் ஒருவர் இடித்ததால், மலைவாழ் மக் கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், கொல்லி மலை வாழவந்தி நாடு ஊராட்சிக்கு உட்பட்ட திண்டுப்பட்டி பகுதியில், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் மூலம் அரசு சமுதாயக்கூடம் கட்டப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வருகிறது. இந்த சமுதாய கூடத்தில் திண்டுப்பட்டி, புத்தூர் பட்டி, மன்னார் குடி பட்டி, வாழவந்தி நாடு ஆகிய பகு திகளை சேர்ந்த மலைவாழ் மக்கள் சுப நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்ற னர். மேலும் புயல், மழைக்காலங் களில் நிவாரண முகாம்களாக பயன் படுகிறது. இந்நிலையில், ராசிபுரம், பெரிய கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு சிலர், ஜேசிபி இயந்திரத் தின் மூலம் அரசு சமுதாய கூடத்தை இடித்துள்ளனர்.
இந்த சமுதாயக் கூடத்தை இடிப்பதற்கு பஞ்சாயத்து அலுவலகத்திலோ, காவல் நிலையத் திலோ முறையான அனுமதி பெற வில்லை என கூறப்படுகிறது. மக்கள் பயன்பாட்டில் உள்ள சமுதாயக் கூடம் இடிக்கப்படுவதை கண்டு ஆவே சமடைந்த மலைவாழ் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதையறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த வாழவந்தி நாடு காவல் துறை யினர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என உறுதிய ளித்தனர். இதனையடுத்து, சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட் டது. இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில், இந்த நிலமானது அர சின் புறம்போக்கு நிலமாகும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சமுதாயக் கூடம் கட்டப்பட்டு மின் இணைப்பு, சாலை, நீர்நிலைத் தொட்டி அமைக்கப் பட்டு மக்கள் பயன்பாட்டில் உள் ளது. இந்நிலையில், சமுதாயக்கூடம் உள்ள பகுதியின் அருகே இடத்தை சௌந்தரராஜன் என்பவரிடமிருந்து வாங்கப்பட்டதாகவும், நிலத்தை அளந்து பார்க்கும் போது சமுதாயக் கூடமும் சேர்ந்து வருவதாக கூறுவது மோசடியாகும். மேலும், மலைவாழ் மக்களின் நிலத்தை நகர் பகுதியில் இருந்து ஒருவர் வாங்குவது சட்டப் படி குற்றம், என்றனர்.