districts

img

சுகாதார சீர்கேட்டை உருவாக்கும் கழிவுநீரை அகற்ற கோரிக்கை

கோவை, டிச.18- உக்கடம் பேருந்து நிலையம் அருகே துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேட்டை உருவாக்கும் வகையில் உள்ள கழிவு நீரை, சுத்தம் செய்திட வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.  கோவை, உக்கடம் பேருந்து நிலை யம் அருகே மாநகராட்சி காய்கறி சந் தைக்கு செல்லும் வழியில், பூ மாரியம் மன் கோவில் உள்ளது. இதன் பின்புறம், பலநாட்களாக கழிவுநீர் தேங்கி நிற்கி றது. இந்த கழிவுநீரால், அப்பகுதி மக் கள் மிகவும் அவதியுற்று வருகின்ற னர். இந்த கழிவுநீரை சுத்தம் செய்ய, மாநகராட்சி நிர்வாகமும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என தெரிகிறது. இந்நிலையில், ஞாயிறன்று பெய்த தொடர் மழையால்,  கழிவுநீர் துர்நாற்றம் வீசுவதோடு சுகா தார சீர்கேட்டை உருவாக்கும்  நிலையில் உள்ளது. அதிகளவிலான கொசும் உற் பத்தியாகி, நோய் தொற்றை ஏற்படுத் தும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, கழிவுநீரை வெளியேற்றி அங்கு தேங்கி யுள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.