கோவை, டிச.30- நீண்ட காலம் சிறையில் வாடுபவர்களை விடுதலை செய்திட வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மக்கள் சிவில் உரிமைக் கழகம், மக்கள் கண்காணிப்பகம், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறப் பட்டுள்ளதாவது, கோவை மத்திய சிறையில் வீரப்பனின் சகோதரர் மாதையன் மற்றும் அவருடன் சேர்ந்து ஆண்டியப்பன், பெருமாள் ஆகியோர் 33 ஆண்டுகளுக்கும் மேலாகத் தண்ட னைச் சிறைவாசிகளாக இருந்து வருகின்றனர். இது போன்ற நீண்ட சிறைவாசம் என்பது சிறைவாசிகளின் நலனுக்கும், அவர்களது குடும்பத்தாரின் நலனுக்கும் மட்டும் எதிரானது அல்ல. சிறைவாசிகளின் மறுவாழ்வு என்கிற அரசின் கண் ணோட்டத்திற்கும் முற்றிலும் எதிரானதாக உள்ளது. சிறைத்துறை உயர் அதிகாரிகள், தமிழக அரசு அதிகாரி கள் முன் விடுதலை குறித்து வெளியிடுகின்ற அரசாணைக ளில் சில குறிப்பிட்ட வழக்குகளில் தண்டனை பெற்ற ஆயுள் சிறைவாசிகளின் முன் விடுதலை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பது வேதனையானது. இதனால், குறிப்பிட்ட சிறைவாசிகளின் மறுவாழ்வு மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வாழ்வு என்பது தொடர்ந்து பெரிதும் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக, வீரப்பனின் சகோதரர் மாதையன் மற்றும் அவ ருடன் சேர்ந்து ஆண்டியப்பன், பெருமாள் ஆகியோர் சுமார் 75 வயதை நெருங்கிய முதியவர்களாக இருந்து வருகிற நிலையில் உடலாலும், மனதாலும் பல்வேறு துயரங்களுக்கு ஆட்பட்டுள்ளனர். முழுக்க மனித நேயக் கண்ணோட்டத்தின் அடிப்படையிலும், இரக்க குணத்தின் அடிப்படையிலும், மன்னிக்கும் அரசமைப்பு அதிகாரத்தைக் தமிழக அரசு பயன்படுத்த வேண்டும் எனும் எதிர்பார்ப்போடு சிறையில் வாடி வருகின்றனர். ஆகவே, தமிழக முதல்வர் கனிவுடன் பரி சீலித்து, இவர்களுக்கு விரைவில் விடுதலை வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்வதாக அந்த கூட்டறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.