districts

img

கிராம நிர்வாகி மீது தாக்குதல்: கைது செய்ய கோரிக்கை

நாமக்கல், மார்ச் 15- கிராம நிர்வாக அலுவலரின் உதவியா ளரை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வருவாய்த் துறை யினர் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள வட்டூர் பகுதியில் கிராம நிர் வாக அலுவலர் அலுவலகம் செயல்பட்டு வரு கிறது. இங்கு கிராம உதவியாளராக பணி புரிந்து வருபவர் சரவணன். இவரிடம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தின் முன்பு வசித்து வரும் சசிகுமார் என்பவர் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ளார். அவ ருக்கு வீட்டுமனை பட்டா  வரவில்லை என்ற தும், ஆத்திரமடைந்த சசிகுமார், கடந்த சில தினங்களுக்கு முன்பு மாலை அலு வலகத்தை விட்டு சரவணன் கிளம்பும்போது அவரை தகாத வார்த்தைகளால் பேசியுள் ளார். பட்டா வழங்குவதில் தனது பங்கு எது வும் இல்லை என்றும் எந்த விவரமாக இருந் தாலும் கிராம நிர்வாக அலுவலரை கேட்டுக் கொள்ளவும் என சரவணனன் தெரிவித்துள் ளார். இதனை ஏற்காமல் சசிகுமார் தாக்கி  உள்ளார். இதனால் காயம் அடைந்த சர வணன் திருச்செங்கோடு அரசு மருத்துவம னையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார்.  இதனைத்தொடர்ந்து, திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள சரவணனுக்கு நீதி கேட்டு கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் தங்களுக்கு பணி பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத் துள்ளனர்.