districts

img

சிக்னலை மதிக்காத வாகன ஓட்டிகளால் விபத்து

கோவை, நவ.9- கோவைப்புதூர் பிரிவில் அமைந்துள்ள போக்குவரத்து சிக்னலை வாகன ஓட்டிகள் மதிக்காமல் செல்வதால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. எனவே, சிக்னல்களில் கூடுதல் போலீசாரை பணியமர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த பெரிய மாநகராக கோவை மாநகரம் உள் ளது. கோவை தொழில் நகரம் என்பதைக் கடந்து, இங்கு  பிரபல பள்ளி, கல்லூரிகள் செயல்பட்டு வருவதால் வெளி மாவட்டங் களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந் தும் மாணவர்கள் வந்து கோவையில் தங்கி  பயின்று வருகின்றனர். இதுபோக ஏராளமான ஐடி நிறுவனங்களும் கோவையில் தொடங் கப்பட்டுள்ளன. இதனால் கோவையில் நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்து அதிக ரித்து வருகிறது. விபத்துகளை தடுக்க போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோவை மாந கர போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே கோவையிலிருந்து பாலக் காடு செல்லும் சாலையில் அமைந்துள்ள கோவைப்புதூர் பிரிவு போக்குவரத்து சிக் னலை வாகன ஓட்டிகள் மதிக்காமல் செல்வ தால் விபத்துகள் நடைபெறுவது தொடர் கதையாகி வருகிறது. கோவைப்புதூர் பிரிவி லிருந்து கோவைப்புதூர் மற்றும் தொண்டா முத்தூர், பாலக்காடு, உக்கடம் என்று கோவையின் மூன்று திசைகளுக்கும் செல்வ தற்கான சாலைகள் உள்ளது. மேலும், இந்த சிக்னலுக்கு அருகிலேயே கல்லூரிகளும் உள்ளன. இப்படிப்பட்ட இடத்தில் உள்ள சிக் னலை வாகன ஓட்டிகள் மதிக்காமல் செல்வது விபத்துக்கு வழிவகுக்கும் நிலையில் உள் ளது. இந்த போக்குவரத்து சிக்னலில் கண் காணிப்பு கேமிரா பொருத்தப்படவில்லை. எனவே, கண்காணிப்பு கேமிரா பொருத்தப் படுவதோடு, போக்குவரத்து போலீசார் காலையிலும், மாலையிலும் பணியில் அமர்த்தப்பட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.