districts

img

குளக்கரையில் குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

உடுமலை, பிப்.13-  உடுமலை அருகே உள்ள குளத் தின் கரையிலும், நீர் வெளியேறும்  மதகு பகுதியிலும் குப்பைகளை கொட் டுவோர் மீது மாசுக்கட்டுப்பாட்டு வாரி யம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  உடுமலை மூணார் செல்லும் சாலையில், அண்ணாநகர் பகுதிக்கு அடுத்து உள்ளது பெரிய குளம். சுமார்  404 ஏக்கர் பரப்பு கொண்ட இக்குளம் அதிக நீர் கொள்ளவு கொண்ட குளம்  என்ற சிறப்பு கொண்டது. இந்த குளத் தின் நீர் இப்பகுதி விவசாயிகளுக்கும் மட்டும் இல்லாமல், குளத்தை சுற்றி சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் நிலத் தடி நீர் மட்டம் உயர்வுக்கும் பயன்படு கிறது. இந்த குளத்தின் அருகே அமைக் கபட்டுவுள்ள ஆழ்குழாய் கிணறுகள் குரல்குட்டை ஊராட்சி பொதுமக்க ளுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. மேலும் விளை நிலம் இல்லாத பொதுமக்கள் இந்த குளப் பகுதியை மேச்சல் நிலமாக பயன் படுத்தி வருகின்றனர். இவ்வாறு விவசாய தேவைகளுக்கு மட்டும் இல் லாமல், பொது மக்களுக்கு மிகவும் பயன்பட்டு வரும் இந்த பெரிய குளத் தின் கரை மற்றும் குளத்தின் உள்ளே மூணார் செல்லும் சாலையில் உள்ள மரம் சம்மந்தபட்ட பொருள்கள் தயா ரிக்கும் நிறுவனத்தில் பயன்படுத்தும் பெயின்ட் மற்றும் மரக்கழிவுகள் கொட் டப்படுகிறது.  மேலும், நகரின் பல்வேறு பகுதி களில் இருந்து கொண்டுவரப்பட்டு இங்கு கொட்டப்படும் கழிவுகளை இரவு நேரங்களில் சில மர்ம நபர்கள் தீ வைத்து விடுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. எனவே, குளத்தின் கரையில் குப்பைகளை கொட்டுபவர் கள் மீது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என விவசாயிகள் மற்றும் பொதுமக் களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.