திருப்பூர், பிப்.20- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம் மேட்டுப்பாளையம் ஊராட்சியில் ஆதிதிராவிடர் மக்கள் குடியிருப்புக்கு குடிநீர் குழாய் இணைப்புத் தராமல் வட் டார வளர்ச்சி அலுவலர் முட்டுக்கட்டை போடுவதாக அப்ப குதி மக்கள் புகார் கூறியுள்ளனர். திங்களன்று அப்பகுதி பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட் பட்ட மேட்டுப்பாளையம் ஊராட்சி அரண்மனை காட்டுப்புதூர் ஆதிதிராவிடர் காலனியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத் தின் கீழ் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலோடு, குடிநீர் தேவைக் காக கிணறு வெட்டப்பட்டது. இதில் இருந்து இக்குடியிருப்பு மக்களுக்கு குழாய் இணைப்புக் கொடுப்பதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் முட்டுக்கட்டையாக இருந்து வருகிறார். ஆதிதிராவிடர் மக்கள் என்ற ஒரே எண்ணத்துக்காக குழாய் இணைப்பு கொடுக்காமல் காலம் கடத்தி வருகிறார். எனவே வட்டார வளர்ச்சி அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். திருப்பூர் வடக்கு பகுதி பொங்குபாளையம் ஸ்ரீ சக்தி கார் டன் பகுதியில் உள்ள வீடுகளுக்கு முறையான சாலை வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி, மருத்துவ வசதி என அத்தியாவ சிய தேவைகள் எதுவும் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்ற னர். இது தொடர்பாக விரைவாக தீர்வு காண வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பு பொது செயலாளர் ஈ.பி.அ. சரவணன், ஆட்சியரிடம் நேரிடையாக மனு அளித்தார்.