உடுமலை, டிச. 29 – உடுமலையில் லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகாதேவி நினைவு அறக்கட்டளை சார் பில் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு குறித்த கருத்தரங்கம், பள்ளி மாணவர்க ளுக்கான கபடி போட்டி நடைபெற்றது. உடுமலை - பொள்ளாச்சி சாலையிலுள்ள சுபாஷ் ரேணுகாதேவி நினைவு அரங்கத்தில் மரம் நடும் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. முன்னதாக லெப்டினன்ட் சுபாஷ் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கும், அவரது தாயார் ரேணுகாதேவி சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இன்ஜினியர் பாலமுருகன் வரவேற்றார். இதில் திருப்பூர் வனக்கோட்ட துணை இயக் குநர் தேஜஸ்வி, ஆனைமலை புலிகள் காப்ப கம், திருப்பூர் வனக்கோட்ட உதவி வன பாது காவலர் கணேஷ்ராம் ஆகியோர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு குறித்த கருத்தரங்கில், முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்கத் தலைவர் ராமலிங்கம், அம ராவதி சைனிக் பள்ளி முன்னாள் ஆசிரியர் சண்முகசுந்தரம், உடுமலை வியாபாரிகள் சங்க தலைவர் பால நாகமாணிக்கம் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். கருத்துரையா ளர்கள் கர்னல் என்.செல்வகுமார், விஷன் டிபன்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆர்.ஜெயமுருகன், சைனிக் ஸ்கூல் முன்னாள் மாணவர் சங்க செயலாளர் புலி வாகனன், டிஎன்பிஎஸ்சி ஐஏஎஸ் அகாடமி விஷ்ணு பிரகாஷ் ஆகி யோர் கருத்துரை வழங்கினர். லெப்டினன்ட் தேவஸ் பாதுகாப்பு துறை தேர்வுகளை இளைஞர்கள் எவ்வாறு தயார் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். விஷ்ணு பிரகாஷ் தமிழ்நாடு அரசு பணிகள் குறித்து எடுத்து கூறினார்.
பின்னர் மாணவ, மாணவியரின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் உடுமலை பகுதியில் உள்ள பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர். தொடர்ந்து பிற்பகல் கபடி போட்டி நடந் தது. இப்போட்டியை உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஆர்.ஜஸ்வந்த் கண்ணன் துவக்கி வைத்தார். உடுமலை ரோட்டரி சங்கத் தலைவர் சத்யம்பாபு, முன்னாள் ரோட்டரி சங் கத் தலைவர் எஸ்.எம்.நாகராஜ், முன்னாள் ராணுவ வீரர் நாயப், சுபேதார் நடராஜ் சிவகு மார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் உடுமலை சுற்று பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி உடு மலை காவல்துறை துணை கண்காணிப் பாளர் தேன்மொழிவேல் சிறப்புரை ஆற்றி னார். இதில் கலந்து கொண்ட போட்டியா ளர்களுக்கு முதல் பரிசு ரூ.5001, இரண்டாம் பரிசு ரூ.3001, மூன்றாம் பரிசு ரூ.2001 வழங்கப் பட்டது. நிகழ்ச்சிகளை உடுமலை அமராவதி சைனிக் பள்ளி ஆங்கில ஆசிரியர் இளமுருகு தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற் பாடுகளை லெப்ட்டிணெட் சுபாஷ் ரேணுகா தேவி நினைவு அறக்கட்டளை நிறுவனர் கே. ஆர். செல்வராஜ் மற்றும் ஒருங்கிணைப்பா ளர் செந்தில், முன்னாள் ராணுவ வீரர் நலச் சங்கத்தினர் செய்திருந்தனர்.