districts

img

தேங்காய்களத்தில் சல்பர்: நடவடிக்கை எடுக்க தீபாலபட்டி பொதுமக்கள் கோரிக்கை

திருப்பூர், டிச.7- தேங்காய்களத்தில் நச்சுத்தன்மை வாய்ந்த சல்பர் பயன்படுத்தப்படுவதால், குடி யிருப்பு பகுதிகளில் வசிப்பவர்களுக்கு நுரை யீரல் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.  உடுமலை ஒன்றிய நிர்வாகம் உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும் என தீபாலபட்டி  பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து தீபாலபட்டி ஊர்ப்பொது மக்கள் புதனன்று உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப் பதாவது, உடுமலை ஒன்றியம் தீபாலபட்டி ஊராட்சியில் பேருந்து நிறுத்தம் அருகில்  செயல்பட்டு வரும் தனியார்  தேங்காய்களத்தில், உடைக் கப்பட்ட  தேங்காய் பருப்புக ளுக்கு நச்சுத்தன்மை வாய்ந்த சல்பர் பயன்படுத் தப்படுகிறது. இதிலிருந்து வெளியேறும் புகை விசத் தன்மை வாய்ந்தது. சல்பர் பயன்படுத்தப்படுவதால் ஆஸ்துமா நுரையீரல் நோய் கள் உருவாகிறது. மேலும் குடியிருப்பு பகுதியில் குழந்தைகள், பெண் கள், முதியோர், நோயாளிகளுக்கு கடுமை யான மூச்சுத்திணறல் ஏற்படக் கூடும். எனவே  உடனடியாக உடுமலை ஒன்றிய நிர்வாகம்  தலையிட்டு குடியிருப்பு பகுதியில் தேங்காய் களத்தில் சல்பர் பயன்படுத்துவதை தடுத்து  நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டு எனக்  கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்று கொண்டு  உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகா ரிகள் தெரிவித்தனர்.