தீக்கதிர் செய்தி எதிரொலி: சாலைகள் செப்பனிடும் பணி துவக்கம்
உடுமலை, ஏப்.13- உடுமலை சாலைகளில் உள்ள பள்ளங்களால் ஏற் படும் விபத்துகள் குறித்து, தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளி யானதையடுத்து, நெடுச்சாலைத்துறையினர் சாலைகளை சீரமைக்கும் பணிகளை துவங்கினர். உடுமலையில் போக்குவரத்து அதிகம் இருக்கும் சாலை யில் உள்ள பள்ளங்களால் தொடர் விபத்துகள் எற்பட்டு வருகிறது. விரைவாக சாலைகளில் இருக்கும் பள்ளங் களை செப்பனிட வேண்டும் என்கிற கோரிக்கை வாகன ஓட்டிகளிடம் இருந்து முன்வைக்கப்பட்டது. இதுகுறித்து நெடுச்சாலை துறையின் உதவி கோட்டப் பொறியாளர் முத்துக்குமாரிடம் காரணம் கேட்டு தீக்கதிர் நாளிதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை செப்பனிடும் பணி துவங்கியது. இந்த சாலை வழியாகத் தான் சுற்றுலா தளங்களான அமராவதி, தீருமூர்த்தி அணைகள், மூணார் ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் போய் வருகின்றனர். மேலும் பல கல்வி நிலையங்கள், அரசு அலுவலகம், தொழிற்சாலைகள் என தினமும் ஆயிரக்காணக்கான வாகனங்கள் செல்லும் முக்கிய சாலையாக உள்ளது. இனி வரும் காலங்களில் இந்த சாலைகளை விபத்து ஏற்படாத வகையில் பராமரிக்க வேண்டும் என தெரிவித் தனர்.
போச்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது
நாமக்கல், ஏப். 13- நாமக்கல் மாவட்டம், கீரம்பூரில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி யில், சமூக அறிவியல் ஆசிரியராக பன்னீர்செல்வம் உள் ளார். இவர் மாணவிகளை ஆபாச படமாகவும் மற்றும் வீடியோ எடுத்தும் தரக்குறைவாக பேசி வந்ததாக கூறப்படு கிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் ஆசிரியரின் அத்துமீறல் குறித்து பெற்றோர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து, 50க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளிக்கு வந்த அவர்கள், ஆசிரியர் பன்னீர்செல்வத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி பள்ளியை முற்றுகை யிட்டனர். இதையடுத்து அங்கிருந்த ஆசிரியர்கள் பன்னீர் செல்வத்தை அங்குள்ள அறையில் பூட்டி வைத்து விட்டு பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அங்கு வந்த பரமத்தி போலீசார் சம்பந்தப் பட்ட ஆசிரியர் பன்னீர்செல்வம் இருந்த அறையை திறக்க முயன்றனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த நாமக்கல் கூடுதல் போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு மணி மாறன், பரமத்திவேலூர் துணை சூப்பிரண்டு கலையரசன் மற்றும் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சதீஷ்குமார் ஆகியோர் பெற்றோர் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவி களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மாவட்ட ஆட்சினர், கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவேண்டும் எனக்கூறி சம்பந்தப்பட்ட ஆசிரியரை பரமத்தி போலீஸ் நிலையத் துக்கு அழைத்து செல்ல விடாமல் தடுத்தனர். இதையடுத்து, ஆசிரியர் பன்னீர்செல்வம் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன்பிறகு ஆசிரி யரை அழைத்து சென்ற போலீஸ் வாகனத்தை வெளியே செல்ல பெற்றோர் அனுமதித்தனர். இந்நிலையில், மாணவிகளை ஆபாசமாக படம் மற்றும் வீடியோ எடுத்ததுடன், தரக்குறைவாக திட்டியதாகவும் ஆசிரியர் பன்னீர் செல்வம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.
மாடுகள் விற்பனை
ஈரோடு, ஏப்.13- கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் 90 சத விகிதம் வியாபாரம் நடை பெற்றது. ஈரோடு- கருங்கல் பாளையம் காவிரி சோதனை சாவடி அருகே வாரந் தோறும் வியாழனன்று மாட்டுச்சந்தை நடை பெறுவது வழக்கம். வியாழனன்று நடந்த மாட்டு சந்தையில் பசுமாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை விற் பனையானது. எருமை மாடு ஒன்று ரூ.30 முதல் 65 ஆயிரம் வரை விற்பனையானது. வளர்ப்பு கன்றுகள் 15 ஆயிரம் வரை விற்பனை யானது. இன்று 90 சதவீதம் வியாபாரம் நடைபெற்றது என வியாபாரிகள் தெரிவித் தனர்.
என்டிசி ஆலைகள் முன்பு கஞ்சி காய்ச்சும் போராட்டம்
கோவை, ஏப்.13- ஒன்றிய அரசுக்கு சொந்தமான என்டிசி ஆலைகளை திறந்து தொழிலாளர்களுக்கு வேலை வழங்கு என்கிற கோரிக்கையை வலியுறுத்தி, என்டிசி ஆலைகள் முன்பு கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு தெரி வித்துள்ளது. தமிழ்நாடு என்டிசி பஞ்சாலை தொழிற் சங்கங்களின் கூட்டுக்குழு கூட்டம், கோவை மாவட்ட மில் தொழிலாளர் சங்கம் சிஐடியு அலுவலகத்தில், ஏஐடியுசி மாநில பொதுச் செயலாளர் ஆறுமுகம் தலைமையில் நடை பெற்றது. சிஐடியு மில் தொழிலாளர் சங்கத் தின் பொதுச்செயலாளர் சி.பத்மநாபன் முன்னிலை வகித்தார். இதில், எந்தவித நியாயமும் இல்லாமல், சட்டவிரோதமாக மூன்று ஆண்டுகாலமாக என்டிசி பஞ்சாலை கள் மூடப்பட்டுள்ளது. இதனால், இத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதி ஊதி யமும் கடந்த ஆறு மாதங்களாக தரப்பட வில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் பணி ஓய்வு பெற்ற ஏராளமான தொழிலாளர்களின் பணிக்கொடை வழங்கப்படவில்லை. தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சரை சந்தித்து முறை யிட்டது துவங்கி தொடர் போராட்டங்கள் முன்னெடுத்தபோதும், ஒன்றிய ஜவுளித் துறையிடமிருந்து எவ்வித தெளிவான முடிவும் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில், ஒன்றிய அரசின் அமைச் சர்கள் யார் கோவைக்கு வந்தாலும் என்டிசி பஞ்சாலைத் தொழிலாளர்கள் சார்பில் கருப்பு கொடி கட்டுவது எனவும், 20 ஆம்தேதி தமிழ் நாட்டில் உள்ள 7 பஞ்சாலைகளின் முன்பும் கஞ்சி காய்ச்சும் போராட்டம் துவக்கி நடத்துவது எனவும் முடிவெடுக்கப்பட் ்டுள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து தொழிற் சங்க கூட்டுக்குழுவின் நிர்வாகிகள் பங்கேற் றனர்.
முட்டை விலை உயர்வு
நாமக்கல், ஏப்.13- கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு முட்டை விலை ரூ.5.60 ஆக இருந்தது. அதன் பின் முட்டை விலை பல்வேறு ஏற்ற, இறக்கங்களை சந் தித்து. ஏப்.10 ஆம் தேதி ஒரு முட்டையின் விலை ரூ.4 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதனி டையே நடைபெற்ற நாமக் கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட் டத்தில், முட்டை விலை 10 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணை கொள் முதல் விலை ரூ.4.10 ஆக நிர் ணயம் செய்யப்பட்டது. பண் ணையாளர்களுக்கு ஒரு முட் டைக்கு ரூ.3.80 மட்டுமே கிடைக்கும்.
ராணுவ முகாமில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சேலம் வீரர் மரணம்
சேலம், ஏப்.13- பஞ்சாப் ராணுவ முகாமில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சேலம் வீரர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற் படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம், பதிண்டா ராணுவ முகாமில் ஆயிரக் கணக்கான ராணுவ வீரர்கள் தங்கி உள்ளனர். இந்நிலையில், அந்த முகாமில் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில் குண்டு பாய்ந்து ராணுவ வீரர்கள் நான்கு பேர் உயிரிழந்தனர். உயிரி ழந்த நான்கு ராணுவ வீரர்களில் இரண்டு பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். ஒருவர் தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள மூணாண்டி பட்டி பகுதியை சேர்ந்த யோகேஸ்வரன். மற்றொருவர் சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த வனவாசி பனங்காட்டை சேர்ந்த கமலேஷ் ஆகியோர் ஆவர். சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த வனவாசி அருகே உள்ள பனங்காடு பகுதியில் சேர்ந்தவர் ரவி நெசவு தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி செல்வமணி இவர்க ளின் இரண்டாவது மகன் கமலேஷ் பிஏ பொருளாதார படித் துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து பஞ் சாபில் உள்ள பதிண்டா பகுதியில் உள்ள ராணுவ முகாமில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அங்கு நடைபெற்ற துப் பாக்கி சூட்டில் கமலேஷ் உயிரிழந்தார். அவரின் உடல் அவ ரது சொந்த ஊருக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை கள் எடுத்து வருகின்றனர். இவரது இறப்பை அறிந்த அந்த கிராம மக்கள் அனை வரும் அவரது வீட்டிற்கு சென்று காத்திருக்கின்றனர். ராணுவ வீரரின் உயிரிழப்பு அந்த கிராமத்தை பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது. அவரது தாயார் மற்றும் உறவினர்கள் உயிரி ழந்த ராணுவ வீரரின் புகைப்படத்தை கட்டி அணைத்து கதறி அழுத காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.