districts

img

பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திடுக

தாராபுரம், ஜூன் 3 - தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளர் சங்கத் தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரத்தில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.  தாராபுரம் கோட்டப் பொறி யாளர் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சங்கத்தின் கோட்ட தலைவர் கே.வெங்கிடுசாமி தலைமை ஏற்றார். மாநில தலை வர் மா.பாலசுப்பிரமணியன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில், சாலைப்பணி யாளர்களின் 41 மாத பணிநீக்க  காலத்தை பணிக்காலமாக முறைப் படுத்தி ஆணை வழங்கவேண்டும். சாலைப்பணியாளர்களுக்கு தொழில் நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியருக்குரிய ஊதிய மாற்றம் ரூ.5200- ரூ.20200 தர ஊதியம் ரூ.1900 வழங்கவேண்டும். ஊதியத்தில் 10 சதவிகிதம் ஆபத்து படி வழங்கவேண்டும். சாலைப்பணியாளர்களின் இறந் தோரின் வாரிசுகளுக்கு நெடுஞ் சாலைத்துறையிலேயே விரைந்து பணி வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.  இதில், சங்க நிர்வாகிகள் சு. செந்தில்நாதன், இல.தில்லை யப்பன், வி.தங்கவேல், சி.மாரி முத்து, என்.சிவக்குமார், ஏ.மணி மொழி, ஆர்.செல்வக்குமார் மற்றும்  அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை தலைவர் கே.செந்தில்குமார் உள் ளிட்ட திரளானோர் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப் பினர். முடிவில் எஸ்.முருகசாமி நன்றி கூறினார். ஈரோடு இதேபோன்று, ஈரோடு, கோபி  கோட்டப் பொறியாளர்கள் அலுவ லகங்களின் முன்பு, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர், தமிழ் நாடு முதல்வரின் கவன ஈர்ப்பு  கோரிக்கை முழக்கம் போராட் டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு கோட்டச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், கோபி கோட்டப் செயலாளர் ஆர்.கருப்புசாமி ஆகி யோர் தலைமை தாங்கினர். துறை வாரி சங்க நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின்  மாவட்ட செயலாளர் ச.விஜய மனோகரன் வாழ்த்துரை வழங் கினர். முன்னதாக, கோரிக்கை மனுக்களை தபால் மூலம் அனுப் பினர்.