districts

img

எழுத்தாளர் க.பொ.கந்தசாமி மறைவு

நாமக்கல், மே 21- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தின் ராசிபுரம் முன்னாள்  செயலாளர் க.பொ.கந்தசாமி கால மானார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே ஆர்.கவுண்டம்பா ளையத்தில் வசித்து வரும் க.பொ. கந்தசாமி அரசு பள்ளி  ஆசிரியராகவும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் ராசிபுரம் தாலுகா செயலாளரா கவும் செயலாற்றியவர். மேலும், 9 மணி வாத்தியார், தர்மபா லன் காவல்காரன், இரு தாய் பெற்ற ஒரு மகள் என்பன உள் ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். இந்நிலையில் வெள்ளி யன்று அவர் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந் தார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவியும், இரண்டு  மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர்.   இவரின் மறைவை அறிந்து அவரது உடலுக்கு மார்க் சிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் எஸ்.கந்த சாமி, மூத்த தோழர் எம்.ஜீ.ராகோபால். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ரங்கசாமி. சு.சுரேஷ் மற்றும்  மாவட்ட குழு,  ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் நேரில் அஞ் சலி செலுத்தினர்.