பொள்ளாச்சி, மார்ச் 4- பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் வனப்பகுதியில் காயங்களுடன் மீட்கப்பட்ட ஒற்றைக் காட்டு யானைக்கு 5 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வெள்ளியன்று உயிரிழந்தது. பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற் குட்பட்ட டாப்சிலிப் பகுதியில் கடந்த 25 ஆம் தேதி கால் மற்றும் உடல் பகு திகளில் காயத்துடன் எங்கும் நகர முடியாமல், உணவின்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் காட்டு யானை ஒன்று உள்ளதாக அப்பகுதி மலைவாழ் மக்கள் வனத்து றைக்கு தகவல் தெரிவித்தனர். இத னையடுத்து உலாந்தி வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில் வேட்டை தடுப்பு காவலர்கள் மற் றும் வனத்துறையினர் சம்பவ இடத் திற்கு சென்று பார்க்கையில், இரண்டு கால்களிலும் காயங்கள் ஏற் பட்ட நிலையில் நகர முடியாமல் நின்றுக் கொண்டிருந்ததை கண்டு உடனடியாக ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிர மணியனுக்கு தகவல் தெரிவித்த னர். இதனைத்தொடர்ந்து, வனத் துறையினரால் யானைக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் கும்கி யானைகள் உதவி யோடு காயமடைந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு, வன கால்நடை மருத்துவர் சுகுமார் தலை மையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர், யானை கோழிக்க முத்தி யானைகள் பயிற்சி முகா மில் பிரத்யேக மரக்கூண்டு அமைத்து அடைக்கப்பட்டது. இந்நிலையில் 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த யானை வியா ழனன்று சிகிச்சை பலனின்றி பரி தாபமாக உயிரிழந்தது. உயிரி ழந்த யானையின் மூன்று கால்கள், முகம் மற்றும் உடலிலும் காயங்கள் இருந்ததால் யானை இறப்பிற்கான காரணம் உடற் கூறாய்வு பிறகே தெரியவரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.