பொள்ளாச்சி, அக்.5- விளை நிலங்களுக்குள் புகுந்து, காட்டுப்பன்றி, மயில் உள்ளிட்ட வன உயிரினங்கள் சேதப்படுத்துவதால் பெரும் பொருட்சேதம் ஏற்படுவதால் இதற்கு நிரந்திர தீர்வை மாவட்ட நிர்வா கம் எடுக்க வேண்டும் என விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வெள்ளி யன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, சார் ஆட்சியர் அ.கேத்தரின் சரண்யா தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் கலந்து கொண்டு அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் மாவட்டப் பொருளாளர் கே.மகாலிங் கம், தாலுகாச் செயலாளர் கே.ஏ.பட்டீஸ் வரமூர்த்தி ஆகியோர் பல்வேறு கோரிக்கை தொடர்பான மனுவினை அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், பொள்ளாச்சி நகராட்சியுடன். சின்னாம் பாளையம், ஊஞ்சவேலாம்பட்டி, கிட்ட சூராம்பாளையம், ஆ.சங்கம்பாளை யம், ஜமீன் முத்தூர் ஆகிய ஊராட்சி களை இணைத்திட கருத்துரு கேட்கப் பட்டுள்ளது. மேற்கண்ட ஊராட்சி களை, நகராட்சியுடன் இணைத்தால் சம் மந்தப்பட்ட ஊராட்சிகளில் நடைபெ றும் வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் பயனாளிகளாக உள்ளவர்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாவர். மேலும், சொத்து வரி உயர்வு உள்ளிட்ட பிரச் சனைகளை இம்மக்கள் சந்திக்க நேரி டும். மேற்கண்ட ஊராட்சிகளில் அக்.2 ஆம் தேதியன்று நடைபெற்ற கிராம சபை கூட்டங்களிலும் பொள்ளாச்சி நக ராட்சியுடன் இணைப்பதை கைவிட தீர் மானம் நிறைவேற்றப்பட்டது. ஆகவே, குறிப்பிட்ட ஊராட்சிகளை பொள் ளாச்சி நகராட்சியோடு இணைக்கும் முடிவை கைவிட வேண்டும். இதே போன்று பொள்ளாச்சி வருவாய் கோட் டத்திற்குட்பட்ட விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள வேளாண் பயிர் களை காட்டு பன்றிகள், மயில் உள் ளிட்ட வன உயிரினங்களால் சேதப் படுத்தப்படுவதால் விவசாயிகள் கடு மையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். சார் ஆட்சியர் தலையிட்டு பாதிக்கப்ப டும் விவசாயிகளுக்கு தீர்வு கிடைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். நீர்வள ஆதாரத்துறைக்கு சொந்தமான ஊட் டுக் கால்வாய் வழியாக ஆழியார் அணைக்கு பாசன நீர் கொண்டுவரப்படு கிறது. அக்காய்வாய் பழுதடைந்து பல காலமாகிவிட்டது. தொடர்ந்து பழுது நீக்கப்பட்டு கரைகள் பழுது பார்க்கப் பட்டு நீர் விரயமாவதை தடுக்கக் கோரிக்கை விடுத்தும் சர்க்கார் பகுதி யிலிருந்து சில கிலோமீட்டர் தூரமே பழு துகள் செப்பனிடப்பட்டுள்ளது. இன் னும் செப்பனிடப்படாத பகுதி சுமார் 20 கிமீ தூரம் இருக்கும். ஆகவே, ஊட்டுக் கால்வாயின் சேதமடைந்த பழுதினை உடனடியாகச் சரி செய்து விட வேண் டும் உள்ளிட்ட கோரிக்கை மனுவினை அளித்தாக தெரிவித்தனர்.